கொழும்பில் மாயமான மகிந்த மீண்டும் வேகம் கொண்டு குருநாகலில்!

300 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது அதிகமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

காரணம் அரசியலில் அடுத்து ஏற்படப்போகும் மாற்றத்திற்கு முக்கிய புள்ளியாக இப்போது மகிந்த வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அண்மைக்காலமாக இவர் ஆட்சிக் கவிழ்ப்புக்காக செயற்பட்டு வருகின்றார் என்றபோதும் அவருடைய செயற்பாடுகள் ஒரு பக்கம் தோல்வியையே தழுவி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதே சமயம் கடும் மன உளைச்சலில் மகிந்த இருப்பதாகவும், வைத்திய சிகிச்சை தேவைப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் அவர் குருநாகல் பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அங்கு இவர் காலை நேர உடற்பயிற்சியினை மேற்கொண்டு இருந்தார்.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகின்றது.

இதன் காரணமாக தோல்விகளைத் தாண்டி மகிந்த மீண்டும் வந்து விட்டார் எனவும் மகிந்த ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மகிந்த தலைமையில் இன்று குருநாகல் நகரில் கூட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பில் இடம் பெற்ற சுதந்திர தின விழாவிற்கு மகிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.

இந்த விடயத்தால் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுவதோடு, நாட்டின் தலைவராக இருந்த ஒருவரது இந்தச் செயல் மகிந்த மீது கடுமையான விமர்சனங்களையும் எழுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.