ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

215 0

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று இரவு 11..00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 .00 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

முன்னதாக நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளை (17) காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.