4 கிலோ 250 கிராம் கஞ்சாவுடம் குடும்பஸ்தர் கைது யாழ்.செம்மணிப் பகுதியில் இன்று சம்பவம் (படங்கள் இணைப்பு)

465 0

image-0-02-01-814792382f99cfd36927f9e6726ac3054bf3a1409b10eab6cf951f13caafe781-Vயாழ்ப்பாணம் செம்மனிப் பகுதியில் 4 கிலோ 250 கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கச்சாய் பகுதியினைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே மேற்படிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
சாவகச்சேரிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்திவரப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையின் தேடுதல் நடத்திய பொலிஸார் யாழ்.செம்மணிப் பகுதியால் வந்து கொண்டிருந்த நபரை மறித்து சோதனை செய்துள்ளனர்.
இதன் போது குறித்த நபரிடம் இருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் முடிவில் கைது செய்யப்பட்டவர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

image-0-02-01-5e968d46d03ac34b21af977affa3281d27ac25948a37771cd13c7d4ce25db368-V image-0-02-01-e47caa1d577b4a736db2379ed3d5823c4b1c6d6caaed176d51ade26526dd7d42-V