இத்தாலி தொடரூந்து விபத்து – 23 பேர் பலி

338 0

news_12-07-2016_79traninதெற்கு இத்தாலியில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 23 பேர் பலியாகினர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பயணிகள் தொடரூந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தொடரூந்துகளும் ஒரே தண்டவாளத்தில் பிரவேசித்தமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.