ராஜிவ் கொலை – சாந்தனை இலங்கை சிறைக்கு மாற்ற நடவடிக்கை

318 0

1466144880-3967ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இலங்கையரான சாந்தனை இலங்கை சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் அதிகாரிகளின் ஊடாக, அவரது சட்டத்தரணி இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவரை இலங்கைக்கே மாற்றுவதற்கான யோசனை தயாரிக்கப்பட்டு, இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கம் என்பவற்றுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அதற்கு முன்னதாக இது தொடர்பில் அவரின் அனுமதிக்க கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.