“ஒத்திவைக்க வேண்டாம்” – சஜித் அணி கோரிக்கை

187 0

கொரோனா நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், அடுத்த நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.