மாவீரர் சங்கரின் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

192 0

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.