மாவீரர் வாரத்தையொட்டி இன்று (26.11.2021 ) லிவர்குசன் தமிழாலயத்தில் வணக்க நிகழ்வு

665 0

மாவீரர் வாரத்தையொட்டி இன்று (26.11.2021 ) லிவர்குசன் தமிழாலயத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் லிவர்குசன் நகரச் செயற்பாட்பாளர் திரு.அகஸ்ரின் ஞானேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.லிவர்குசன் தமிழாலய நிர்வாகி நாகநாதன் மனோகரன் அவர்கள் மாவீரர் நினைவுப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தி மாவீரரை வணங்கினர்.அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான கவிதாஞ்சலியை செல்வி அபர்ணா ஜெயச்சந்திரன், செல்வன் கபிசன் செல்வேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.