நாட்டில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று

219 0
இன்று (21) மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுக்கு உள்ளான 14,108 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.