மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

132 0

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இதனைக் குறிப்பிட்டார்.