நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் பலி

178 0

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 30 வயதுக்கு உட்பட்ட எவரும் நேற்றைய தினம் (26) உயிரிழக்கவில்லை எனவும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 5 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.