கொழும்பின் 3 மாடி வீடொன்றில் ‘குஷ்’ போதைப்பொருள் செடிகள் கண்டுபிடிப்பு !

245 0

முல்லேரியா ஹிம்புத்தான பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் தாவரங்கள் இன்று தலங்கம லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மூன்று மாடி வீட்டின் ஒரு விஷேட அறையில் இந்த போதைப்பொருள் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட அறையில் செடிகள் நடப்பட்டு, மிதமான வெப்பநிலையில் பராமரிக்கப்பட்டு வந்ததும், அந்த வீடு கட்டுமானம் செய்து வரும் ஒருவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

43 வயது சந்தேக நபருடன் அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட செடிகளும் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.