யாழ். தையிட்டியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு

251 0
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வலி. வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்று மாலை கணவன் – மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவர் வீட்டிலிருந்து வெளியேறித் தலைமறைவாகியுள்ளார்.
கத்திக்குத்து காயத்துக்குள்ளான மனைவியின் அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலி ஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.