பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

174 0

20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, நாள்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது.