கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் பி.சி.ஆர்.சோதனை வசதிகள்

284 0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயற்படும்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்படும்.

ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். அதேநேரத்தில் ஆய்வகம் சோதனைகளை ஒவ்வொரு மணிநேரமும் 500 சோதனைகள் அடங்கலாக அன்றாடம் 7 ஆயிரம் சோதனைகளை மேற்கொள்ளும்.

பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் மூன்று மணி நேரத்திற்குள் வெளியிடப்படும்.

அதன்படி சுற்றுலாப் பயணிகள் எதிர்மறையான சோதனை முடிவுகளை அளித்து, கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால், தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக நாட்டிற்குள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு விசேட சலுகையின் கீழ், இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் சோதனைகள் முன்னெடுக்கப்படும்.