குருநாகல் மாவட்டம், நாரம்மல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிரிஉல்ல வீதி – பொதுகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீதியில் பயணித்த கார் ஒன்று அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற கோன்வௌ பிரதேச்தைச் சேர்ந்த 38 வயது குடும்பஸ்தர் படுகாயமடைந்தார். அவர் உடனே நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

