கிளிநொச்சியில் குறைந்து வரும் கொவிட் தொற்றாளர்கள்

176 0

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் நாள் ஒன்றுக்கு 267 வரையில் உயர்வடைந்திருந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை, படிப்படியாக குறைவடைந்துள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் கடுமையான முயற்சிகளின் பலனாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலான மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதேச செயலாளர்கள்இ கிராமசேவகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்இ ஊழியர்களும் இதற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் வழங்கிஇ தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்களை உரிய முறையில் கையாண்டனர்.

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் கொவிட் தொற்று நிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தணியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்