அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகள் நீக்கப்பட்டனவா?

153 0

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகளை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுத் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

சிறைச்சாலை மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் சிறைக்குள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்து அவர் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டார்.
“போதையில் இருக்கும்போது அமைச்சர் கட்டுக்கடங்காத வகையில் செயற்பட சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே சிறைக்குள் நுழைய முடியும் என்பதையும் பெரேரா எடுத்துரைத்தார்.