சீனி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் அவதானம்

155 0

இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சகத்தில் தென்கொரிய முதலீட்டார்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இக் கலந்துரையாடலின்போது உள்ளூர் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.