இலங்கையில் பூகம்பம் ஏற்படுவதை தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

245 0

இலங்கை பூகம்பம் ஏற்படக்கூடிய அபாய வலயத்தில் இல்லாத போதிலும் இந்தோனேஸியாவை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிரேஷ்ட பூகம்பம் தொடர்பான நிபுணர் நில்மினி தல்தென தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சுனாமி நிலமைக்கு முகங்கொடுக்க தற்போது அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.