தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி!

221 0

ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி செலுத்தினர். நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள நினைவிடத்தில் இன்றைய தினம் மாலை 06 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கட்சியின் ஊடக பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.