தனியன் காட்டு யானையின் ஊடுறுவலால் மக்கள் பீதி

259 0

தனியன் காட்டு  யானை ஒன்று   ஊடுருவிய  நிலையில் மக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை   காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்திலுள் இன்று(13)  அதிகாலை தனியன் காட்டு  யானை ஒன்றின்  அட்டகாசத்தினால் அங்குள்ள  வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி  பிரதேச மக்கள் கடும் பீதியில் வாழ்ந்து வருவதாக  தெரிவிக்கின்றனர்.இன்று ஒரு தனியன் யானை ஒன்றின்  அட்டகாசத்தினால் வாழை தென்னை முதலான பயிர்களை அதிகமாக சேதமாக்கியுள்ளதுடன் வீட்டில் தங்கியிருந்த மக்கள் தெய்வாதிகமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த பகுதி கிராமங்களுக்குள்  வந்து சேதம் விளைவித்து வந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

தினமும்  காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இப்பகுதியில் உள்ள  வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் துவம்சம் செய்து சென்றுள்ளன. காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.