கொரோனாவுக்கு பலியான பிறந்து 6 நாட்களான குழந்தை

150 0

பலங்கொட வைத்தியசாலையில் 6 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.