வீட்டு சுவர் பிரச்சினை : ஒருவர் கொலை

140 0

பலாங்கொடை பொலிஸ் பிரிவில் வெலேகும்புர , மெதகந்த பிரதேசத்தில் கடுமையாக தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெலேகும்புர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் சுவர் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிந்த நபர் 59 வயதுடைய வெலேகும்புர – மெதகந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.