8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

463 0

பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன் தமிழின மக்களின் நியாயமான கோரிக்கையினை முன்னிறுத்தி நடைபெற்ற கலந்துரையாடலோடு அர்லோன் மாநகரசபை நோக்கி விரைகின்றது.

நாளை வெள்ளிக்கிழமை காலை யேர்மன் எல்லையை வந்தடையும் அறவழி ஈருறுளிப்பயணம்
மாலை 4.00 மணிக்கு Rathaus,Rathausplatz. 1, 66111 Saarbrücken
முன்பாக வந்தடையும் அவா்களை வரவேற்க மக்களை ஒன்று கூடுமாறு அறவழிப்போராட்ட யேர்மன் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.