மட்டு நாவலடியில் மதுபானம் விற்றவர் 73 கால் போத்தல்களுடன் கைது!

204 0

மட்டக்களப்பு நாவலடி வாவிக்கரையில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றின் அருகில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்ற ஒருவரை 73 கால் போத்தல் கொண்ட மதுபான போத்தல்களுடன் நேற்று புதன்கிழமை (08) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தலைமையிலான காவல்துறையினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பகுதியை முற்றுகையிட்டனர். இதன்போது வாவிகரையில் வைத்து அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 73 கால் போத்தல் கொண்ட மதுபான போத்தல்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை காத்தான்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.