மறவன்புலவு சச்சிதானந்தனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர்! ஜனாதிபதிக்கு கடிதம்

205 0

யாழ். தெல்லிப்பளையில் இடம்பெறும் மதமாற்றச் செயற்பாடுகள் தொடர்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கலாச்சார அமைச்சருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

யாழ். தெல்லிப்பளையில் இடம்பெறும் மதமாற்றச் செயற்பாடுகள் தொடர்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கலாச்சார அமைச்சருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தைப் பார்வையிட்ட தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் தெல்லிப்பளையில் இடம்பெறும் மதமாற்றச் செயற்பாடுகளினால் அங்கு வசிக்கும் மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாததால் அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு எனக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆகிய நீங்கள் மதமாற்றத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.