யாழில் ஆபத்தான குளத்தில் சிக்கிய பசு: கடும் முயற்சிக்கு பிறகு மீட்கப்பட்டது

169 0

யாழ்.கஸ்தூரியார் வீதிக்கு பின்புறமாகவுள்ள நகரகுளம் தற்போது யாழ்.மாநகர சபையினால் தூர்வாரப்படும் வருகின்றது.

அவதானம் இல்லாமல் இக் குளத்திற்குள் இறங்கி யாரும் கால் வைத்தால் புதைத்து போகுமளவுக்கு சேறு இக் குளத்தில் நிறைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

நேற்று மதியம் புல் மேய்வதற்காக குளத்தினுள் சென்ற பசு மாடொன்று குளத்திற்குள் புதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது.

தகவலறித்து இச்சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணிநேர கடும் முயற்சிக்கு பிறகு சேற்றில் இருந்து பசுவை மீட்டுள்ளனர்.