மன்னாரில் சுகாதார சேவை பணியாளர்கள் போராட்டம்!

183 0

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் ஆகியோர் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரி இன்று (19) மருத்துவமனை வளாகத்தில் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் தமக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செம்ரெம்பர், நவம்பர் மற்றும் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை மட்டுப்படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கினார்கள்.