3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

159 0

இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 139 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.