திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது

170 0
திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்திற்காக உரிய ஆவணங்களை சமர்பித்தால் மாத்திரம் அனுமதி வழங் கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரி வித்துள்ளார்.

 

திருமண நிகழ்வின் போது மணமக்கள் இரு மாகாணங் களில் இருப்பின் ஒரு தரப்பினருக்கு அடுத்த மாகாணத் திற்குப் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மணமக்களின் பெற்றோருக்கு வாய்ப்பளிக் கப்படுவதுடன் வேறு எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.