நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் ஆரம்பம்! காவற்துறையினர் குவிப்பு

241 0

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று(13) காலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஆலய வளாகத்தில் காவற்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 09 ம் திகதி பிரதேச செயலகத்தினால் இம் முறை 10 பேர் மாத்திரமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது .இருப்பினும் தற்போது நாட்டில் 150 பேர் வரை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி இருப்பினும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு ஆலய உட்சவம் ஆரம்பமாகியுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு பொங்கல் உட்சவம் .ஆரம்பமாகியுள்ளது.