பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

317 0

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கொம்பனித்தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார். 49 வயதான குறித்த பெண் நாடு முழுவதும் பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.