கிளிநொச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14பேர் கைது

234 0

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் கிளிநொச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 4 இலட்சத்து 15ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தினை பொலிஸார் சுற்றி வளைத்த போது , அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த 4 இலட்சத்து 15ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டனர்.

பயணத்தடையை மீறி , சுகாதார விதிமுறைகளை மீறியமைக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழும் , சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு எதிராகவும் தனித்தனி வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.