நாட்டில் இதுவரையில் 2,329 பேருக்கு கொரோனா தொற்று!

262 0

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று மாத்திரம் 2,329 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தமாக 223,163 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2,031 பேர் இன்று குணமடைந்தனர். தொற்று நோய் தடுப்பு பிரிவால் நாளாந்தம் வெளியிடப்படும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.