இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேற்றம்!

463 0
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றினால் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், இலங்கைக்கான ஜி.​எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை மற்றும் அதனுடன் தொடர்பான மரபுகளை மீறுவதாக அமைந்துள்ளதாக குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் 705 பேரில் 628 பேர் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் 15 பேர் யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

மேலும் 40 பேர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர்.

ஜி.​எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநீக்குமாறு குறித்த யோசனை மூலம் ஐரோப்பிய பாராளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளது.

ஜி.​எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் கிடைத்திருந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்வது உள்ளிட்ட 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.