மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் – இராணுவதளபதி

206 0
போக்குவரத்து கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் நீக்கப்படுகின்ற போதிலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து தடை தொடரும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்தே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 நிலைமையை கருத்தில் எடுத்த பின்னரும் சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.