மனைவியைப் பிரிந்த கணவரும் உயிரிழப்பு

220 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நிமோனியாக் காரணமாக மனைவி உயிரிழந்து இருவாரங்களுக்குப் பின்னர், கணவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சோகமானச் சம்பவமொன்று காலியில் பதிவாகியுள்ளது.

காலி – ரிச்மன்டிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளையொருவரின் தந்தையான  70 வயதுடைய கணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி கடந்த மாதம் 20ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருந்தார்.

இதன்பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவர், மகன், மருமகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதோடு, இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இம்மாதம் 6ஆம் திகதி வெளியாகியிருந்தன.

பிசிஆர் பரிசோதனை வெளியாகிய மறுநாளே (07) கணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்து  வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மரணப் பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நிமோனியாக் காரணமாக உயிரிழந்துள்ளதாக கராபிடிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.