கொம்பன் யானையின் உடலம் மீட்பு

205 0

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதிக்கு அண்மையில் யானை ஒன்றின் உடலம்,  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டரை அடி நீள தந்தத்தைக் கொண்ட, சுமார் 30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க, 8 அடி உயரமுடைய கொம்பன் யானை ஒன்றே இறந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த யானை, இரு வாரங்களுக்கு முன்னர், பன்றிக்கு வைக்கும் சோளவ வெடியை உட்கொண்டு தொண்டையில் சிக்கியதன் காரணமாக உணவு சாப்பிட முடியாது இறந்திருக்கலாம் என வன ஜீவராசிகள்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

யானையின் இறப்பு தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை, வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.