ஸ்பெயினை விடாத கொரோனா – 37 லட்சத்தை கடந்தது பாதிப்பு

242 0

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 11-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 236-ஐக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.90 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 1.36 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.