மட்டக்களப்பு- இருதயபுரத்தில் விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

338 0

மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இருதயபுரம்- ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன் குரூஸ் (49வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டு.மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.