ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கொவிட் 19 தடுப்பு மருந்துகளுடான விமானம் ஒன்று இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இலங்கைக்கு அவசரகால மருத்துவப் பொருட்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
விஷேட விமானம் ஒன்றின் 6 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கையில் சுகாதாரத் துறைக்கு 880,000 பாதுகாப்பு ஆடைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இதய துடிப்பை அளவிட 1,200 Oximeters வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.