யேர்மனி, முன்சன் தமிழாலயத்தில் இணைந்த 15 புதிய மாணவர்கள்.

1232 0

30.05.2021 அன்று யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 15 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் St.Gertrud தேவாலய வளாகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந் நிகழ்வு பாதுகாப்பான முறையில் நிர்வாகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எமது சிறார்களின் தாய் மொழி முன்னேற்றம் கருதி நடைபெற்ற இந் நிகழ்வில் எமது பழைய மாணவர்களின் பிள்ளைகளும், ஏனைய பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் எம் தாயகச் சிறார்களுக்கு உதவும் நோக்கில், help for smile
சேமிப்புக்கலங்களைச் செயற்பாட்டாளரான செல்வன் கிர்ஜென் சதானந்தன் அவர்களிடம் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.