வைத்தியர் ஒருவரின் தாய் கொரோனாவுக்கு பலி

262 0

கொழும்பு அரச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரியும் வைத்தியர் ஒருவரின் தாய் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க​த்தின் தலைவர் வைத்தியர் சந்திக எபிடகடுவ இதனை தெரிவித்தார்.

குறித்த வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் அவரது தாயாருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வைத்தியர் சந்திக எபிடகடுவ மேலும் குறிப்பிட்டார்.