வல்லை அராலி வீதி கட்டுவன் சந்திவரைக்கும் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

429 0

K800_13612198_656293684520063_1289102294760620662_nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த வல்வை அராலி வீதி கட்டுவன் சந்தி வரைக்குமாக சுமார் 600 மீற்றர் தூரம் பொது மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அண்மையில் 101.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கையளிக்கப்பட்ட பகுதிகளில் வல்வை அராலி வீதியும் மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அப்பகுதியில் உள்ள படைமுகாம் காரணமாக குறித்த வீதியினை முழுமையாக விடுவதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இவ்வாறு மறுப்புத் தெரிவித்திருந்த இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை ஊடறுத்து ஒரு புதிய மாற்று வீதி ஒன்றினையும் அமைத்திருந்தனர்.
தமது காணிகளை ஊடறுத்து புதிய வீதியினை அமைக்கப்பட்டமை தொடர்பாக காணி உரிமையாளர்கள் அரச அதிகாரிகளுடனும், இராணுவத்தினருடம் முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்.மாவ்ட அரசாங்க அதிபரினால் குறித்த வல்வை வீதியினை முழுமையாக விடுவிக்குமாறு கோரி இராணுவத்திற்கு கடிதம் ஒன்று கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வல்வை அராலி வீதி கட்டுவன் சந்திவரைக்குமாக சுமார் 600 மீற்றர் தூரம் வரைக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தெல்லிப்பளையில் இருந்து வல்வை அராலி வீதியுடாக செல்பவர்கள் கட்டுவன் சந்திவரைக்கும் மட்டுமே பயணிக்க முடியும். அதே போன்று அச்சுவேலியில் இருந்து வல்வை அராலி வீதியுடாக வருபவர்கள் ஒட்டகப்புலம் சிஸ்ரர் மடத்தடி வரைக்கும் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளினால் பொது மக்கள் கட்டுவன் சந்திவரைக்கும் சென்று அங்கிருந்து குரும்பசிட்டி ஊடாக வசாவிளான் – பலாலி வீதியினை சென்றடைய முடியும்.

K800_13557673_656293857853379_2802668441992557201_n K800_13620385_656293721186726_8603334082669969438_n K800_13620823_656293974520034_3368060163631604529_n