பொருள்படும் பூமி.-வன்னியூர் குருஸ்-

296 0

பொருள்படும் பூமி.
********
சீராக எண்ணுமென் சிந்தையோ சிதைகிறது
சீர்கெட்டார் செயல்தனைச் சொல்கையிலே
ஈறாகத் தமிழனை இங்கேதான் அழித்தோமென்ற
தீராத இனவெறித் தீயர்கள் செயல்கண்டு..!

வீரனை வெல்வது போர்க்களம் அல்லவோ….!
ஊர்களைத் தின்றதே உங்களின் வீரமோ
யாரை நீ அழித்தாய் என்பதை இங்கே
வீரமாய் பேசிடும் கோரனே பாரடா….!

பிரளயம் நிகழ்ந்த பூமியா இதுவென்று…
பிந்நாளில் எங்களின் தலைமுறை கேட்கலாம்…!
பரணியே பாடிய வீரத்தின் நிலமென்று
இந்நாளில் எழுதிவை பின்நாளில் பொருள்தரும்.

-வன்னியூர் குருஸ்-