நாளை மறுதினம் ஈதுல் பித்ர் பெருநாள் தினமாக அறிவிப்பு

257 0

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இம்முறை ரமழான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளை மறுதினம் (14) ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாட உள்ளனர்.