இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

274 0

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 144 பேர்  குணமடைந்து நேற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து,775 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 21 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 247 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில், 598 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.