யாழில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்- வயோதிபர் கொலை!

224 0

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா வயது-72 என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது. அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிரிழந்துள்ளார்.

அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.