சாதனைக்காக கடல் கடந்து செல்லும் விமான படை வீரர்

271 0

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை ​நேற்று (10) அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள அவர், பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைவார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.